Trisangu

Friday, April 07, 2006

பலா மரம்

நெடு நெடுவென வளர்ந்து நின்றது!
காற்றில் இலை அசைத்து
கவிதைகள் பல சொன்னது!
மனம் நொந்த வேளைகளில்
நண்பனாய் இதமளித்தது!

காய்க்கவில்லை என்பதால்
பலா மரத்தை வெட்டாதே
என் அப்பா !

எனக்கு கூடத்தான்
வேலை கிடைக்கவில்லை!