Trisangu

Friday, February 17, 2006

ஞாபகத்தேய்வு











பாதி மறந்த
பாடலின் ஸ்ருதியாய்
உன் முகம் மட்டும் நினைவில்
வார்த்தைகள் மறந்து போய்..
எங்கிருக்கிறாய் நீ !!!

Sunday, February 05, 2006

கிட்ட வந்து நீ !!

கிட்ட வந்து நீ
கட்டிப் பிடித்தெனெக்கு
முத்தம் கொடுக்கையில்
முகம் சுளிக்கிறாயே மகளே !!
முள்ளாய் குத்துதோ உன் அப்பனின் தாடி !
இனிமேலும்
உன் பட்டுக் கன்னம் பாழ்படாமல் இருக்க
செய்து கொள்கிறேன் ஷேவ் !!