Trisangu

Sunday, February 05, 2006

கிட்ட வந்து நீ !!

கிட்ட வந்து நீ
கட்டிப் பிடித்தெனெக்கு
முத்தம் கொடுக்கையில்
முகம் சுளிக்கிறாயே மகளே !!
முள்ளாய் குத்துதோ உன் அப்பனின் தாடி !
இனிமேலும்
உன் பட்டுக் கன்னம் பாழ்படாமல் இருக்க
செய்து கொள்கிறேன் ஷேவ் !!

2 Comments:

Anonymous Anonymous said...

Here is your ‘pudhuk kavidhai’ song in a more formal style (veNbA). To be in line with the ‘modern theme’, I have used the word ‘kiss’ as a ’Tamil’ word!

கிட்டவந்து கிஸ்கொடுத்துக் கொஞ்சும் பொழு(து)உனது
பட்டுக்கன் னத்தி(ல்)என்முள் பட்டுப்புண் - பட்டதோ!
கண்ணே கவலைப் படாதே!உன் அப்பன்நான்
பண்ணிக்கொள் வேன்சவரம் பார்!

( == Same lines but in normal format == i.e. without splitting sIrs for poetry ==

கிட்ட வந்து கிஸ் கொடுத்துக் கொஞ்சும் பொழுது உனது
பட்டுக் கன்னத்தில் என் முள் பட்டுப் புண் பட்டதோ!
கண்ணே கவலைப்படாதே! உன் அப்பன் நான்
பண்ணிக்கொள்வேன் சவரம் பார்!
)

Mani

11:39 PM  
Blogger Sridhar said...

நன்றி நண்பரே!!!

உங்கள் முதல் வரியை
பட்டை தீட்டினால்...

' கிட்டவந்து முத்தமிழைத்து கொஞ்சுகையில் உன்'

என்றிருந்திருக்கலாமோ!!

8:04 AM  

Post a Comment

<< Home